கரூர், டிச. 5: கரூர் அருகே பாதியில் பேருந்தை விட்டு இறக்கி விட்ட ஆத்திரத்தில், கல்லை எறிந்து கண்ணாடியை உடைத்த நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கரூர் பேரூந்து நிலையத்தில் இருந்து அரசு டவுன் பஸ் ஒன்று, நேற்று காலை 6மணியளவில் கொடுமுடிக்கு புறப்பட்டுச் சென்றது. பேரூந்தை சசிக்குமார் என்பவர் ஓட்டிச் சென்றார். இந்த பேரூந்து ஈரோடு சாலை குட்டைக்கடை அருகே சென்ற போது, அந்த நிறுத்தத்தில் 40வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கொடுமுடி செல்வதற்காக ஏறியுள்ளார். பஸசில் ஏறிய நிமிடத்தில் இருந்து குடிபோதையில் உளறிக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், பயணிகள் அனைவரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.