மாநில குத்துச்சண்டை போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு

சிங்கம்புணரி, டிச. 3:  சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் 22 பேர்கள் கலந்து கொண்டனர். தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குத்துசண்டை போட்டியில். சிங்கம்புணரி, சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், தேவகோட்டை, பள்ளியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 17 வயதுக்குட்பட்ட 46 கிலோவிற்கு உட்பட்ட பிரிவில் கே.சேவுகமூர்த்தி முதலிடம், 48-50 கிலோ பிரிவில் எஸ்.ஆகாஷ் முதலிடமும், 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் டி.கரண்குமார் முதலிடம் பெற்றனர். புவனேஸ்வரன், சேவுகமூர்த்தி, சந்தோஷ்குமார்,  அபினேஷ், லெட்சுமணன், சதீஸ்குமார் ஆகியோர் இரண்டாம் இடம் பெற்றனர்.

இதில் முதலிடம் பெற்ற மாணவர்கள் தமிழக அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் கிறிஸ்டல் ஜெயன், உதவி தலைமை ஆசிரியர் அன்பு மற்றும் தமிழ் ஆசிரியர் ராமலிங்கம், உடற்கல்வி ஆசிரியர்கள் பாரதி, பாஸ்கரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Related Stories: