இளையான்குடியில் திருச்செந்தூர் பக்தர்களுக்கு மாற்று மதத்தினர் வரவேற்பு

இளையான்குடி, மே 16: இளையான்குடி, சாலைக்கிராமம், சூராணம், தாயமங்கலம், சாத்தனூர், கோட்டையூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முருக பக்தர்கள் ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் வைகாசி விசாகம் திருவிழாவில் கலந்து கொள்வதற்கு பாதயாத்திரையாக சென்று நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதுபோல இந்தாண்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் வருகிற மே 23ம் தேதி வைகாசி விசாகம் நடைபெற உள்ளது. விழாவில் கலந்து கொள்ளும் வகையில், இளையான்குடி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த முருக பக்தர்கள் கடந்த ஒரு வாரமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாலையணிந்து விரதமிருந்தனர். நேற்று பாதயாத்திரையாக நடந்து செல்ல ஆரம்பித்தனர். சாலை வழியாக பாதயாத்திரை செல்லும் பக்தர்களை மாற்று மதத்தினர் வரவேற்று பிஸ்கட், தண்ணீர் கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

The post இளையான்குடியில் திருச்செந்தூர் பக்தர்களுக்கு மாற்று மதத்தினர் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: