ஊதிய உயர்வு வழங்க கோரி மனு

சிவகங்கை, மே 10: சிவகங்கை மாவட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஊதிய உயர்வை அமல்படுத்தக் கோரி மனு அளிக்கப்பட்டது. அகில இந்திய விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கலெக்டர் ஆஷாஅஜித்திடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான கிராமப்புற மக்கள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் ஒன்றிய அரசு சார்பில் உயர்த்தப்பட்ட ஊதியம் ரூ.319ஐ இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். அரசு ஊதிய உயர்வு அளித்துள்ள நிலையில், அதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

The post ஊதிய உயர்வு வழங்க கோரி மனு appeared first on Dinakaran.

Related Stories: