உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் வல்லரசு பா.பி. கூட்டணி நீடிப்பு

மதுரை, டிச. 1:  வல்லரசு பார்வர்டு பிளாக் மாநில குழு கூட்டம் மதுரையில் கட்சி தலைவர் அம்மாவாசி தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் சந்திரசேகரன் வரவேற்றார். இதில் திமுக.வுடன் அமைந்த கூட்டணியை உள்ளாட்சி தேர்தலிலும் தொடருவது, வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேறின. கட்சி நிர்வாகிகள் தனோகரன், கருப்பதேவன், தனசிங் மனோகரன், காஞ்சிபரமன், ஜெயபாண்டி, கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: