செஞ்சிலுவைச் சங்க முகாம்

மதுரை, டிச.1:  மதுரை கோவில்பாப்பாகுடியி–்ல உள்ள மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் செஞ்சிலுவைச் சங்க முகாம் நடந்தது. செஞ்சிலுவை சங்க அறிவுரையாளர் நாகநாதன் சிறப்புரை நிகழ்த்தினார். பள்ளி முதல்வர் விஜயலட்சுமி, ஜூனியர் ரெட்கிராஸ்  ஒருங்கிணைப்பாளர் வளர்மதி, மதுரை மாவட்ட செஞ்சிலுவைச் சங்க நிர்வாகி ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரத்ததான முகாம் நடந்தது. அரசு மருத்துவமனை, செஞ்சிலுவைச் சங்கத்தினர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: