ஈரோடு, டிச. 1: பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி சித்தோடு வெல்ல மண்டியில் உருண்டை வெல்லம் மூட்டைக்கு ரூ.30 உயர்ந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, முள்ளாம்பரப்பு, கோபி, கவுந்தப்பாடி, அம்மாபேட்டை ஆகிய பகுதியில் 100க்கும் மேற்பட்ட கரும்பாலைகளில் உருண்டை, அச்சு வெல்லம், நாட்டு சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் ஈரோடு அடுத்த சித்தோடு வெல்ல மண்டிக்கு சனிக்கிழமைதோறும் நடக்கும் ஏலத்தில் 30 கிலோ மூட்டைகளாக விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். வெல்லத்தை கொள்முதல் செய்ய ஈரோடு மட்டுமல்லாது தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் மொத்த வியாபாரிகள் வாங்கி செல்வர்.