சாத்தான்குளம் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

சாத்தான்குளம், நவ. 28: சாத்தான்குளம்  டிஎன்டிடிஏ ஆர்எம்பி புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில்  வட்ட சட்டப்பணிக்குழு சார்பில் குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்  நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் எட்வர்ட் தலைமை  வகித்தார். வட்ட சட்டப்பணிக்குழு நிர்வாக உதவியாளர் ஜோன்ஸ் வரவேற்றார்.  வக்கீல் சாமுவேல் ரமேஷ்குமார், குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான  சட்ட பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து  பேசினார். இதில்  ஆசிரியர்கள் ஆசீர், வசந்த்ஜெபத்துரை,  இசபெல்லா, கோயில்ராணி, பிளாரன்ஸ்  பெல்சி, ராஜலட்சுமி, ராஜேஷ்ஜெபஸ்டின், ஆக்னஸ், ஜெரோம் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். வட்ட சட்டப்பணிக்குழு  தன்னார்வலர் மகேந்திரன் நன்றி கூறினார்.

Related Stories: