ஆழ்வார்திருநகரி சுகாதார நிலையத்திற்கு புதிய ஜெனரேட்டர்

வைகுண்டம், நவ. 28: ஆழ்வார்திருநகரி  ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சீனிவாசா சேவை அறக்கட்டளையினர் ரூ.2  லட்சம் மதிப்பிலான புதிய ஜெனரேட்டர் வழங்கினர். இதையொட்டி நடந்த விழாவிற்கு தலைமை வகித்த சுகாதாரத் துறை பணிகளுக்கான துணை இயக்குநர் கீதாராணி, புதிய  ஜெனரேட்டர் அறையை  திறந்துவைத்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர்  வடிவேலு வரவேற்றார். சீனிவாசா சேவை அறக்கட்டளை நிர்வாக மேலாளர்  சுவாமிநாதன், வட்டார மருத்துவர் பார்த்தீபன் முன்னாள் பிடிஓராஜப்பா  வெங்கடாசாரி,  முன்னிலை வகித்தனர். விழாவில் மருத்துவ அலுவலர்கள்  தாய் விஜய ரோகினி, பல் மருத்துவர் விஜய பாண்டியன்  உள்ளிட்ட நிர்வாகிகள் பலர்  பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆரம்ப சுகாதார பணியாளர்களும், சீனிவாசா  சேவை அறக்கட்டளை பணியாளர்களும் செய்திருந்தனர். சுகாதார ஆய்வாளர் சோமசுந்தரம்  நன்றி கூறினார்.

Related Stories: