சமூக விரோதிகள் யார்? வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் அழிப்பு போலீசார் விசாரணை மூதாட்டியிடம் 7 பவுன் செயின் பறிப்பு பட்டப்பகலில் துணிகரம்

திருச்சி, நவ. 27: திருச்சியில் பட்டப்பகலில் வீட்டுக்கு மூதாட்டியிடம் 7 பவுன் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள். திருச்சி காஜாமலை இபி காலனியை சேர்ந்தவர் பசுபதிபொன்னுசாமி. ஓய்வு மின்வாரிய அதிகாரி. இவரது மனைவி விஜயலட்சுமி (66). இவர் நேற்று காலை அருகில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பினார். பூட்டப்பட்டிருந்த கேட்டின் பூட்டை திறக்க முற்படும் போது, அருகில் நின்றிருந்த 2 மர்ம நபர்கள், விஜயலட்சுமி கழுத்தில் இருந்த 9 பவுன் செயினை பறித்தனர். அப்போது செயினை பிடிக்க முற்படும் போது 7 பவுன் செயின் மர்ம நபர்கள் கையில் இருந்தது. மீதியுள்ள 2 பவுன் செயினோடு விஜயலட்சுமி கத்தி கூச்சலிட்டார். ஆனாலும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: