திருவண்ணாமலை, நவ.27: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மாட வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் நேற்று அகற்றினர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வரும் 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.அதையொட்டி தீபத்திருவிழாவிற்கு சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.அதையொட்டி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் போன்றவை மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் மாட வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், நகர் பகுதியில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை, அகற்றும் பணியில் வருவாய் துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர்.