சவேரியார் பேராலய திருவிழா குமரியில் டிச.3ல் உள்ளூர் விடுமுறை

நாகர்கோவில், நவ.27: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:குமரி மாவட்டத்தில் கோட்டார் தூய சவேரியார் பேராலய பெருந்திருவிழாவை முன்னிட்டு 3.12.2019 (செவ்வாய்கிழமை) அன்று குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர்  விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

3.12.2019 அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக டிசம்பர் இரண்டாவது சனிக்கிழமை (14.12.2019) அன்று குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.3.12.2019 அன்று குமரி மாவட்டத்தில் தலைமைக்கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: