குளத்தூர் அருகே சூதாடிய 7 பேர் கைது

குளத்தூர், நவ. 26: தருவைகுளம் எஸ்ஐ ராஜ்குமார் மற்றும் போலீசார், துரைச்சாமிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது காட்டுபகுதியில் இதே ஊரை சேர்ந்த மாடசாமி (35), முருகானந்தம் (54), ராமலிங்கம் (40), சரவணசாமி (32), ராமகிருஷ்ணன் (39), மாரிமுத்து (39), தங்கமணி (42) ஆகியோர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.1800யை பறிமுதல் செய்தனர்.

Related Stories: