திருவனந்தபுரம், நவ.22: ேகரள மாநிலம் கொல்லத்தில் 105 வயதான மூதாட்டி நான்காம் வகுப்பு தேர்வு எழுதி சாதனை படைத்துள்ளார்.
கேரள கல்வித்துறை சார்பில் அனைவருக்கும் எழுத்தறிவு திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் கல்வியை தொடர முடியாமல் பாதியில் கைவிட்டவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான வயதானவர்களும் பயின்று வருகின்றனர் இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த பறக்குளம் பகுதியை சேர்ந்த பாகீரதியம்மா என்ற 105 வயதான மூதாட்டிக்கும் கல்வி கற்க ஆசை ஏற்பட்டது. இவர் ஒன்பது வயதாக இருக்கும்போது குடும்ப சூழ்நிலை காரணமாக மூன்றாவது வகுப்பில் படிப்பை ைகவிட்டார். தொடர்ந்து அவரால் படிக்க முடியவில்லை.