குமரி மாவட்டத்தில் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரக்கூடிய பெண்களிடம் நைசாக பேசி தொடர்பு ஏற்படுத்தி அவர்களை தனிமையில் சந்திக்கும் அளவுக்கு சில போலீஸ் அதிகாரிகள் நெருக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள் . இதுவே அவர்களுக்கு சிக்கலாகியும் விடுகிறது. இதுக்கு முன் இன்ஸ்பெக்டர் ஒருவர் காவல்நிலையத்தில் இருந்தபடியே பெண் ஒருவரிடம் ஆபாசமாக நடந்து கொண்ட காட்சி வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது . இந்த காட்சி வெளியானதின் பி்ன்னணியில் தனிப்படை போலீஸ்காரர் ஒருவர் இருந்தது தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட பெண் யாருக்கு என்ற போட்டியில் இந்த வாட்ஸ் அப் ஆபாசம் வெளியானது .