சீர்காழி, நவ.22: சீர்காழி நகராட்சி பகுதிகளில் பல நாட்களாக தேங்கி கிடந்த மழைநீர் அகற்றப்பட்டது. நாகை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் கொள்ளிட முக்கூட்டு ஈசானிய தெரு உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. தேங்கிய மழை நீரை அகற்ற வேண்டுமென பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து நகராட்சி ஆணையர் பொறுப்பு வசந்தன் மழை நீர் தேங்கிய பகுதிகளுக்கு நகராட்சி ஊழியர்களை அனுப்பி ஆய்வு செய்தபின் துப்புரவு ஊழியர்களைக் கொண்டு தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள், வியாபாரிகள் நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.