மதுரையில் பரிதாபத்தை ஏற்படுத்தும் சம்பவம் தேசிய அளவிலான யோகா போட்டி

மேலூர், நவ. 22: தேசிய அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் பல பரிசுகளை வென்று ஓவரால் சாம்பியன்ஷிப் பெற்று மேலூர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அசத்தி உள்ளனர்.

தேசிய அளவிலான யோகாசன போட்டிகள் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் மேலூர் ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 60க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.    இதில் ஏராளமான வெற்றிகளை இப்பள்ளி மாணவர்கள் குவித்தனர். இதனால் அதிக பரிசுகளை வென்ற பள்ளி என்ற ஓவரால் சாம்பியன் ஷிப் பட்டத்தை இப் பள்ளி மாணவர்கள் வென்றனர்.  வெற்றி பெற்று திரும்பிய மாணவர்களையும், பயிற்சி அளித்த யோகா ஆசிரியர்கள் சரவண பாண்டியன், முகமது சல்மான், ரமேஷ் ஆகியோரை பள்ளி தாளாளர்கள் ரவிச்சந்திரன், விஜயலட்சுமி மற்றும் முதல்வர் உஷா, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் வாழ்த்தி வரவேற்றனர்.

Related Stories: