மேலூர், நவ. 22: மேலூர் நகராட்சிக்கு என புதிதாக வாங்கப்பட்ட சிறிய வகையிலான குப்பை அள்ளும் வாகனங்கள் இது வரை பயன்படுத்தப்படாமல் குப்பையில் போடப்பட்டிருப்பது ஏன் என நகர் மக்கள் கேள்வி எழுப்புயுள்ளனர்.
மேலூர் நகராட்சிக்கு என குப்பைகள் அள்ளுவதற்காக லாரி, டிராக்டர் போன்ற வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய தெருக்களிலும் சென்று எளிதில் குப்பைகள் அள்ளுவதற்கு வசதியாக சிறிய வகை வேன்கள் நகராட்சி சார்பில் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த மாதம் 20 சிறய வகை வாகனங்கள் வாங்கப்பட்டது.