திருப்பூர், நவ.22: பொது மக்களின் அவசிய தேவையான குடிநீர் திட்டப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு, நகர்புற உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவன மேலாண்மை இயக்குநர் பிரகாஷ் அறிவுறுத்தினார்.அம்ரூத், குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளின் செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம், திருப்பூர் மாநகராட்சி கூட்டரங்–்கில் நேற்று நடந்தது. தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவன மேலாண்மை இயக்குநர் பிரகாஷ் தலைமை வகித்து பேசியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் நான்காவது குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 4வது திட்ட குடிநீர் குழாய்களை பதிக்கும் போது, மரங்கள் அகற்றப்பட்டால் அதற்கு பதில் வேறு ஒரு மரம் நட வேண்டும்.