கோவை, நவ.22: கோவை திராவிடர் விடுதலைக் கழகப் பிரமுகர் பாரூக் கொலை செய்யப்பட்ட வழக்கை ஒத்திவைத்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவை, உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் பாரூக் (31). இரும்பு வியாபாரியான இவர், திராவிடர் விடுதலைக் கழகத்தில் தீவிரமாக செயல்பட்டார். கடந்த 2017ல் மார்ச் 16ம் தேதி பைக்கில் உக்கடம் சென்றபோது மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த அன்சாத் (31), சதாம் உசேன் (32), சம்சுதீன் (27), அக்ரம்சந்த் (32), ஜாபர் அலி (29), அப்துல் முனாப் (30) ஆகியோரை பெரியகடை வீதி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. பின் மேற்கண்ட 6 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.