க.பரமத்தி, நவ. 20: டிஎன்பிஎல் சார்பில் இலவச தேனீ வளர்ப்பு பயிற்சியில் பங்கேற்ற 35 பேருக்கு தேனீக்களுடன் கூடிய தேனீ பெட்டிகள் வழங்கப்பட்டது.கரூர் ஒன்றியம் காகிதபுரம் பேரூராட்சியில் இயங்கி வரும் டிஎன்பிஎல் நிறுவனம் பல்வேறு சமுதாய பணிகளில் ஒன்றாக ஆலையை சுற்றி உள்ள காகிதபுரம், புஞ்சைபுகழூர், புஞ்சைதோட்டக்குறிச்சி பேரூராட்சிகள் மற்றும் திருக்காடுதுறை, வேட்டமங்கலம், புன்னம், கோம்புபாளையம், நஞ்சைபுகழூர் ஆகிய ஊராட்சி பகுதி கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்காக கால்நடை தீவன வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது.தொடர்ந்து விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்காக மதுரை கதர் கிராம தொழில்கள் ஆணையத்துடன் இணைந்து இலவச தேனீ வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது.