சிவகங்கை, நவ.20: பிப்ரவரி மாதம் வெளியிடப்படவுள்ள இறுதி வாக்காளர் பட்டியல் தொடர்பாக சிறப்பு பார்வையாளர் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு கூடுதல் செயலர் மற்றும் சிவகங்கை மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் சம்பத் தலைமை வகித்து பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியல் நூறு சதவீதம் ஆய்வு செய்து அதனடிப்படையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியை வாக்குச்சாவடி மைய நிலைய அலுவலர்கள் ஒவ்வொரு பகுதியாகச் சென்று ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். வெளியூரிலிருந்து மாறுதலாகி வரும் நபர்கள் குறித்த விபரம் சரிசெய்தல் மற்றும் நீக்கல் போன்ற பணிகளை கள ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்த பின்பு பதிவேற்றம் செய்ய வேண்டும்.