வேலூர், நவ.20:வேலூர் மாவட்டத்தில் உரம் இருப்பில் குளறுபடி காணப்பட்டதால் 5 உரக்கடைகளுக்கு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.வேலூர் மாவட்டத்தில் 250 சில்லரை விற்பனை கடைகள், 61 மொத்த விற்பனை கடைகள், 181 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் உரம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமீப காலமாக பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் விவசாயம் செய்வதில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் உரம் விற்பனை களைகட்டியுள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் யூரியா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி வேலூர் மாவட்டத்தில் தனியார் மற்றும் கூட்டுறவு உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் மூட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக தினகரன் நாளிதழில் நேற்று முன்தினம் விரிவாக செய்தி வெளியானது.