திருச்செங்கோடு, நவ.19: திருச்செங்கோடு விவேகானந்தா வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. விழாவிற்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கருணாநிதி தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணவேணி கருணாநிதி, துணை மேலாண்மை இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச்செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், நிதிவர்ஷிகா, துணைத் தாளாளர் டாக்டர் கிருபாநிதி, நிர்வாக இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் கல்வி ஆலோசகருமான விஸ்வநாதன், தலைமை நிர்வாகி சொக்கலிங்கம், சேர்க்கை இயக்குநர் வரதராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக திருச்செங்கோடு டிஎஸ்பி சண்முகம் கலந்து கொண்டார்.