வாடிப்பட்டி, நவ. 19: வாடிப்பட்டி பகுதியில் நெற்பயிர்களை வேகமாக தாக்கி வரும் செவட்டை நோயினை கட்டுப்படுத்த வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாடிப்பட்டி பகுதியில் பேரனை முதல் கள்ளந்திரி வரை சுமார் 45ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முல்லை பெரியாறு பாசன கால்வாய் தண்ணீர் மூலம் இருபோக நெல்சாகுபடி நடைபெறும். இந்த ஆண்டு பருவமழை கை கொடுத்ததால் இப்பகுதி விவசாயிகள் முதல்போக நெல் சாகுபடி பணிகளை முழுவீச்சில் துவங்கினர். இப்பகுதி விவசாயிகள் அதிகளவில் ஏ.டி.டி.37, ஐ.ஆர்.16, உமா, ஜோதி ஆகிய விதை நெற்கள் மூலம் தயாரான நெற்பயிர்களை பயிரிட்டுள்ளனர். இவை 100 நாட்களிலிருந்து 120 நாட்களில் விளையும் தன்மை உடையது. தற்போது நெற் பயிர்கள் பால்பிடிக்கும் பருவத்திற்கு வர வங்கியுள்ளன.