திருப்பூர், நவ.19: திருப்பூரில் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், நொய்யல் ஆற்றில் தூர்வாரும் பணி துவஙகி நடந்து வருகிறது.
வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. திருப்பூர் நகரில், மத்தியில் ஓடும் நொய்யல் ஆறு, 12 கி.மீ. தூரம் அமைந்துள்ளது. ஆற்றின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள், நேரடியாக ஆற்றுக்குள் கொட்டப்படும், குப்பைகள், இறைச்சி கழிவுகளால், நீர் வழித்தடம் மறிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றில் சாக்கடை கழிவு நீர் ஓடுவதால், சீமை கருவேலன் மரங்கள், செடிகள், மரங்கள் முளைத்து, புதர் மண்டி காணப்படுகிறது.