கோவை, நவ. 19: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை மண்டல அலுவலகத்தில் ஓட்டுநர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஈரோடு மண்டல கிளை 2ல் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் பாரதிதாசன். இவர் கோவை மண்டல அன்னூர் கிளைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அன்னூர் கிளையில் பணிபுரிய உத்தரவு கடிதம கேட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை தலைமை அலுவலகத்திற்கு நேற்று வந்தார். உத்தரவு தர கால தாமதம் செய்வதாக கூறி அலுவலகம் உள்ளே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.