போடி, நவ. 12: போடி அருகே மக்காச்சோளத்தில் நோய் தடுப்பு முறைகள் குறித்து வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஆய்வு செய்தனர். உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் கீர்த்தனா, சௌந்தர்யா, தனஸ்ரீ, மம்தா, வினோதினி ஆகிய மாணவிகள், போடி வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் அமலா வழிகாட்டுதலின்பேரில் போடி பகுதியில் தங்கி கிராம தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளை சந்தித்து வருகின்றனர். இந்த மாணவிகள் போடி விசுவாசபுரம் கிராமத்தில் மக்காச்சோளத்தில் நோய் தடுப்பு முறைகள் குறித்து ஆய்வு செய்தனர்.