கரூர், நவ. 12: இரண்டாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பி தற்போது அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் குறைந்த அளவிலான தண்ணீரை திறந்து விடப்பட்டாலும் காவிரி ஆற்றில் தண்ணீர் அனைத்து பகுதிகளிலும் பரவலாக சென்று வருகிறது.இந்நிலையில் கரூர் மாவட்டம் மாயனூரில் கதவணை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கதவணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இதே போல் மாயனூர் பகுதியில் நூற்றுக்கணக்கானோர் மீன் பிடித்து விற்பனை செய்வதை தொழிலாக கொண்டுள்ளனர். வாரந்தோறும் ஞாயிறு மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த அனைவரும் இங்கு சென்றுதான் மீன்களை வாங்கி வருகின்றனர்.