போக்குவரத்து அலுவலகம் திடீர் முற்றுகை

பண்ருட்டி, நவ. 7: பண்ருட்டியிலிருந்து  கருக்கை கிராமத்திற்கு செல்ல வேண்டிய அரசு பேருந்துக்காக அந்த கிராமத்தை  சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு பண்ருட்டி பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். நீண்ட  நேரமாகியும் பேருந்து வராததால், நேர கண்காணிப்பு அலுவலகத்தை  அணுகி ஏன் பேருந்து வரவில்லை என கேட்டனர். அப்போது ஊழியர்கள் பேருந்து  வந்துவிடும் காத்திருங்கள் என தெரிவித்துள்ளனர். நீண்ட நேரமாகியும் பேருந்து வராததால் திடீரென  நேர காப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து போக்குவரத்து கழக  டெப்போவில் இருந்து மாற்று பேருந்து  மூலம் கிராம மக்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories: