புதுக்கோட்டை, நவ.7: ஆலங்குடி பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் 95 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இந்த சுற்றுவட்டார பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளிகள், தனியார் மேல்நிலை பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. இந்த பள்ளிகளில் இருந்து ஆண்டுக்கு ஆயிரக்கணாக்கான மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். இவ்வாறு தேர்ச்சி பெறும் மாணவர்கள் கலை அறிவியல் படிக்க வேண்டும் எனில் புதுக்கோட்டை அல்லது திருச்சி ஆகிய இரண்டு நகரங்களை நோக்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது.