உத்திரமேரூர், நவ.7: உத்திரமேரூர் அருகே ஆண்டித்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள திறந்தவெளி கிணற்றில் குப்பை கழிவுகள் கிடப்பதால, அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். உத்திரமேரூர் அடுத்த ஆண்டித்தாங்கல் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடம் அருகே விநாயகர் கோயில், அரசு தொடக்கப்பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளின் நடுவே திறந்தவெளி கிணறு ஒன்று உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் குடிநீர் தேவைக்காக ந்த கிணறு பயன்படுத்தப்பட்டது. நாளடைவில் கிராம மக்களின் குடிநீர் தேவைக்கு மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டுகிறது. இதனால் குடிநீர் வழங்கிய கிணற்றினை சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் பயன்படுத்த தவறிவிட்டனர். இதனால் கிணறு பாழடைந்து காணப்படுகிறது.