மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

திருச்செங்கோடு, நவ.6: மல்லசமுத்திரத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் வட்டார வளமையத்தில், மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கான அரசு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. அனைவருக்கும்  கல்வி இயக்க வட்டார வளமையத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) மாதேஸ்வரி தலைமை வகித்தார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாற்றுத்திறன் குழந்தைகள் பற்றியும், தேசிய அடையாள அட்டை வழங்குவது குறித்தும் பெற்றோர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.

இந்த முகாமில் சுமார் 25 குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் முருகேசன், ஆசிரியப் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: