ராசிபுரம். நவ.6: ராசிபுரம் நகராட்சியில், கடந்த ஒரு வாராமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. தற்போது கோயில் திருவிழா நடந்து வருவதால் தண்ணீரின்றி பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான பொங்கல் விழா, அக்னி குண்டம் மற்றும் தேரோட்டம் ஆகியவை இன்றும், நாளையும் நடக்கிறது. இந்நிலையில் ராசிபுரம் நகராட்சி பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.