மதுரை, நவ. 6: ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி, மதுரை அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு, பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் சார்பில், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி, மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எல்பிஎப், சிஐடியு, ஏஐடியுசி, ஹெச்எம்ஸ், டிடிஎஸ்எப், எம்எல்எப், எல்எல்எப், டியுசிசி உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.