மன்னார்குடி, நவ. 6: மன்னார்குடி அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தில் சுவாமி ஊர்வலம் தொடர் பாக இரு சமூகத்தினரிடையே தொடர் மோதல் நடைபெற்று வந்த நிலையில் பிரச்னை குறித்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்ட த்தில் மறு உத்தரவு வரும் வரை தெருக்களில் சுவாமி வீதியுலா நடத்துவதற்கு ஆர்டிஓ தடை விதித்து உத்தரவிட்டார்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலம் காவல் சரகத் திற்குட்பட்ட ரெங்கநாதபுரம் கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்த மான அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகநாத சுவாமி, தேவி, பூதேவி மற்றும் சாஸ்தா வீரப்பன் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் சுவாமி ஊர்வலம் தொடர்பாக இரு சமூகத்தினரிடையே நீண்ட நாட்களாக முன் விரோதம் இருந்து வந்தது. கோயில் திருவிழா காலங்களில் சுவாமி ஊர்வலம் ஒரு சமூகத்தினர் வசிக்கும் தெரு வழியாக செல்வதற்கு மற்றொரு சமூகத்தை சேர்ந்த சிலர் தொ டர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இரு சமூகத்தை சேர்ந்தவர்களிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவி வந்தது.இந்நிலையில் ரெங்கநாதபுரம் சுவாமி ஊர்வலம் தொடர்பாக இரு தரப்பின ரிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக மீண்டும் மன்னார்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் புண்ணியக்கோட்டி தலைமையில் நேற்று சமாதான கூட்டம் நடைபெற்றது.