கரூர், நவ. 6: மனு கொடுக்க வந்தவர்களை கைது செய்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.கரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கந்தசாமி விடுத்துள்ள அறிக்கை:கரூர் மாவட்ட ஆட்சிதலைவரிடம் குறைதீர் நாள் முகாமில், மாட்டு வண்டியில் உள்ளூர் தேவைக்கு மணல் அள்ள அனுமதி வேண்டி மனு அளிக்க சென்ற மாட்டுவண்டி தொழிற்சங்கத்தினரை அவமரியாதையாக நடத்தியதோடு, மேலும் அதிகாரத்தை பயன்படுத்தி காவல்துறையினரை வைதது 4 தொழிலாளர்களையும் குண்டுகட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றி சென்று மாலையில் விடுவித்துள்ளனர். ஆட்சியரின் இச்செயல் பொதுமக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.