குன்னூர், நவ.6: குன்னூரில் அரசு தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டின் குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா ஆகிய பூங்காக்கள் உள்ளன.
இந்த பூங்காக்களுக்கு சுற்றுலா பயணிகள் தமிழக மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினசரி வந்து செல்கின்றனர். கடந்த வாரம் பெய்து வந்த கன மழைகாரணமாக பூங்காவில் உள்ள மலர்கள் அழுகி வீணாகியது. இரண்டாவது சீசனுக்காக தயார் நிலையில் இருந்த மலர் செடிகள் தண்ணீரில் வீணாகியது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.