திருவள்ளுவர் சிலை அவமதிப்பு கண்டித்து முகத்தில் கருப்பு துணி கட்டி பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி, நவ.6: தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி முகத்தில் கறுப்பு துணி கட்டி பள்ளிமாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தது பொன்னேரியில் பரபரப்பை  ஏற்படுத்தியது. தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி பொன்னேரியில் பள்ளி மாணவர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சையில் நேற்று முன்தினம் திருவள்ளுவர் சிலையின் கண்களை கட்டியும், முகத்தில் சாணத்தை பூசியும் மர்ம நபர்கள் அவமதிப்பு செய்தனர். இதற்கு நாடு முழுவதும் தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை  தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் பொன்னேரி அடுத்த பெரிய மனோபுரம் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கண்களில் கருப்பு துணி கட்டி கொண்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்தவர்களை போலீசார் கண்டறிந்து உடனே கைது செய்ய வேண்டும் என மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: