பெரம்பலூர், நவ. 5: அரசு கட்டிடங்களுக்காக பொது இடத்தை பாதுகாத்து வருகிறோம். இலவச வீட்டுமனைகளுக்காக பிரித்து கொடுத்து விடாதீர்கள் என்று பெரம்பலூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் கிழுமத்தூர் கிராம மக்கள் மனு அளித்தனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சாந்தா தலைமை வகி்த்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.குன்னம் தாலுகா வேப்பூர் ஒன்றியம் கிழுமத்தூரை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர். அதில் கிழுமத்தூர் ஊராட்சியில் அரசு மாதிரிப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கு அருகே உள்ள பொது இடத்தை எங்கள் ஊராட்சி பொதுமக்களும் சுற்றுவட்டார கிராம பொதுமக்களும் பயன்பெறும் வகையில் அரசு கட்டிடங்களான கால்நடை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கட்டுப்பாட்டில் உள்ள நெல் கொள்முதல் நிலையம் போன்றவற்றை அமைத்து கொள்ள பாதுகாத்து வைத்துள்ளோம்.