கரூர், நவ. 5: கரூர் வெங்கமேடு 7வது வார்டு பகுதியில் துணை சுகாதார நிலைய வளாகம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினமும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில் சுகாதார வளாகத்தில் சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட கூரைப்பந்தல் தற்போது விழும் நிலையில் மோசமாக உள்ளது. நோயாளிகள் வந்து செல்லும் இந்த வளாகத்தில் மோசமான நிலையில் உள்ள இதனை உடனடியாக அகற்றி சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.