கொலை வழக்கில் தேடப்பட்டவர் சரண்

உசிலம்பட்டி, நவ. 5: கொலை வழக்கில் தேடப்பட்டவர் உசிலம்பட்டி நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். உசிலம்பட்டி தேனி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் முத்துமணி என்பவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதில், தேடப்பட்டு வந்த கொலைக் குற்றவாளியான மதுரை தெப்பக்குளத்தை சேர்ந்த சங்கர் மகன் சீனிவாசன் (18) நேற்று உசிலம்பட்டி நீதிமன்றத்தில் ஜே.எம்.1ல் (பொ) நீதிபதி ராஜேஸ்குமார் முன்னிலையில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து, தேனி சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

Related Stories: