2 டிராக்டர் பறிமுதல்

பேரையூர், நவ. 5: சாப்டூர் அருகே, அனுமதியின்றி மண் அள்ளி வந்த 2 டிராக்டர்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் பகுதியில் சட்டவிரோதமாக மண் அள்ளுவதாக புகார் வந்ததையடுத்து, போலீசார் ரோந்து சென்றனர்.அப்போது சாப்டூர் அருகே, வந்த 2 டிராக்டர்கள் மறித்து சோதனை செய்ததில், அவர்கள் எ.கல்லுப்பட்டி ஓடைப்பகுதியில் மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்த சாப்டூர் போலீசார், எம்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த சந்துரு (30), மருதுபாண்டி (32) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: