உத்திரமேரூர், நவ.5: வீட்டு மனைப் பட்டா கேட்டு இருளர் இன மக்கள், உத்திரமேரூர் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட இருளர் மற்றும் பழங்குடியின குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் குடியிருப்புகளில் பெருமபாலானோருக்கு பட்டா இல்லாததால் நீர்நிலை பகுதிகளில் குடிசையில் வாழ்கின்றனர்.நீர்நிலைப் பகுதி என்பதால் குடிநீர், மின்சாரம் உள்பட அடிப்படை வசதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு வழங்கும் இலவச வீடுகள் கூட கட்ட முடியாமல் தவிக்கின்றனர்.