குமாரபாளையம், நவ.1: குமாரபாளையம் நகராட்சி அருகே நடன விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் குமரகுருபரன். இவருக்கு சொந்தமான கட்டடத்தில், பவானி குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கோன் வைண்டிங் ஆலை வைத்துள்ளார். நேற்று இரவு 9 மணியளவில், அங்கு 5 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு கொட்டப்பட்டிருந்த நூலில் இருந்து புகை வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நூலில் தீ பற்றியது. இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.