நரிக்குடி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருச்சுழி, நவ.1: நரிக்குடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவ, மாணவியர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. நரிக்குடி அருகே வீரசோழன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2008ல் படித்த பழைய மாணவ, மாணவியர்களின் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இம்மாணவ, மாணவியர்கள் அரசு அலுவலர்களாகவும், வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். முன்னாள் மாணவர்கள் சார்பில் ஆசிரியர்களை கவுரப்படுத்தினர். இவர்கள் 10 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்த நிகழ்வை ஒவ்வொருவரும் பகிர்ந்துகொண்டு பள்ளி பருவ காலம் மீண்டும் வந்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.   

இவ்விழாவில் தற்போது பயின்றும் மாணவர்களுக்கு, தங்களின் கடந்த கால நினைவுகள்  மற்றும் தங்களின் வாழ்வில் பெற்ற வெற்றிகளின் அறிவுரைகளை எடுத்துக்கூறி உற்சாகப்படுத்தினர். வருகின்ற ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் மாணவர்கள் சந்தித்து பள்ளி மற்றும் கிராம மேம்பாட்டிற்கு தேவையான விஷயங்களை முன்னெடுக்க வேண்டும் என முடிவெடுத்தனர். பின்னர் பள்ளி வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட மரகன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது வாழ்க்கை குறித்து பரிமாறிக்கொண்டனர்.

Related Stories: