திருச்சுழி, நவ.1: நரிக்குடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவ, மாணவியர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. நரிக்குடி அருகே வீரசோழன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2008ல் படித்த பழைய மாணவ, மாணவியர்களின் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இம்மாணவ, மாணவியர்கள் அரசு அலுவலர்களாகவும், வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். முன்னாள் மாணவர்கள் சார்பில் ஆசிரியர்களை கவுரப்படுத்தினர். இவர்கள் 10 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்த நிகழ்வை ஒவ்வொருவரும் பகிர்ந்துகொண்டு பள்ளி பருவ காலம் மீண்டும் வந்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.