தேனி, நவ.1: தேனியில் நேற்று சாரல்மழை பெய்ததால் நகர் முழுவதும் ஜில்லென இருந்துது. தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலத்திற்கும் மேலாக பருவமழை பெய்து வருகிறது. இதில் செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் விடிய, விடிய மழை பெய்த காரணத்தினால் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார்.