காங்கயம், நவ.1:காங்கயம் காசி விஸ்வநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் மூன்றாம் நாளில் முருகப்பெருமான் வீதி உலா நடந்தது.
காங்கயம் பழையகோட்டை சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கந்தர் சஷ்டி விழா கடந்த 28ம் தேதி துவங்கியது. அன்று பக்தர்கள் விரம் இருந்து காப்பு கட்டிக் கொண்டனர். தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தினமும் ஒவ்வொரு கட்டளை தாரர்கள் ஏற்பாட்டின்படி சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.