முருகப்பெருமான் திருவீதி உலா

காங்கயம், நவ.1:காங்கயம் காசி விஸ்வநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் மூன்றாம் நாளில் முருகப்பெருமான் வீதி உலா நடந்தது.

காங்கயம் பழையகோட்டை சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கந்தர் சஷ்டி விழா கடந்த 28ம் தேதி துவங்கியது. அன்று பக்தர்கள் விரம் இருந்து காப்பு கட்டிக் கொண்டனர். தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தினமும் ஒவ்வொரு கட்டளை தாரர்கள் ஏற்பாட்டின்படி சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.

விழாவின் மூன்றாம் நாளான நேற்று முருகப்பெருமான் கோயிலில் இருந்து புறப்பட்டு சூரனை வதம் செய்யும் வீதிகளில் உலா நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடைபெறுகிறது. 3ம் தேதி திருக்கல்யாண உற்சம் நடைபெற உள்ளது.

Related Stories: