ஈரோடு, நவ.1: ஈரோடு சூரம்பட்டி வலசில் புதிதாக அமைக்கப்பட்ட மாநகராட்சி உரக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற கோரி அப்பகுதி மக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாநகராட்சி 3ம் மண்டலத்திற்கு உட்பட்ட 40வது வார்டு சூரம்பட்டி வலசு வ.உ.சி. வீதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் கடந்த 3 மாதத்திற்கு முன்பு குடியிருப்புகளுக்கு மத்தியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை சேகரித்து உரமாக்கும் கிடங்கு அமைக்கப்பட்டது. இந்த கிடங்கில் இருந்து வெளியேறும் புகையினால் மூச்சுதிணறலும், அதேபோல் துர்நாற்றமும் ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதனால், இந்த உரக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற கோரி கடந்த ர்ந்து அதே பாதிப்பு இருந்து வந்ததால், நேற்று காலை மாநகராட்சி உரக்கிடங்கை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.