ஈரோடு, நவ.1: குறைக்கப்பட்ட ஊதியத்தை உயர்த்த கோரி தாளவாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நவ.6ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த கிராம பஞ்சாயத்து டேங்க் ஆப்ரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்டம் தாளவாடியில் நேற்று நடந்தது. சங்க மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கி கோரிக்கைகளை விளக்கி பேசினார். கூட்டத்தில், தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 10 ஊராட்சிகளில் பணியாற்றி வரும் டேங்க் ஆப்ரேட்டர்கள், துப்புரவு பணியாளர்களின் ஊதியம் தற்போது எவ்வித காரணமும் இல்லாமல் குறைக்கப்பட்டுள்ளது.